Thursday, February 12, 2026 10:15 am
கிளிவெட்டி, குமாரபுரம் படுகொலையின் 30 ஆவது ஆண்டு நினைவேந்தல் யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தில் இடம்பெற்றது.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்களின் ஏற்பாட்டில் நடைபெற்ற நினைவேந்தலில் உயிரிழந்தவர்களுக்கு மலர்தூவி, சுடரேற்றி, அஞ்சலி செலுத்தப்பட்டது.

1996.02.11 அன்று இடம்பெற்ற குமாரபுரம் படுகொலையில், 12 வயதுக்குக் கீழ்ப்பட்ட 09 பிள்ளைகள், 09 பெண்கள் உட்பட 26 பேர் படுகொலை செய்யப்பட்டதுடன் பலர் படுகாயமடைந்தமை குறிப்பிடத்தக்கது.

