Monday, January 5, 2026 4:02 pm
கடுமையான வானிலை காரணமாக தேங்காய்களின் உற்பத்தி குறைந்து தேவை அதிகரித்ததால் தேங்காய்களினது விலை அதிகரித்துக் காணப்படுகின்றது என தேசிய நுகர்வோர் முன்னணி தெரிவித்துள்ளது.
சந்தையில் கடந்த இரண்டு வாரங்களில் தேங்காய் எண்ணெய் போத்தலின் விலை 100 ரூபாவால் அதிகரித்துள்ளது.
மேலும், மரக்கறி எண்ணெயின் விலையும் அதிகரித்துள்ளதாக அதன் தலைவர் அசேல சம்பத் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, சந்தையில் தேங்காய்களின் விலை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன்படி கடந்த வாரம் நடைபெற்ற தேங்காய் ஏலத்தில் ஒரு தேங்காயின் விலை ரூ. 122 – 124 வரை இருந்த நிலையில், சில்லறை விற்பனையாளர்கள் ஒரு தேங்காயை ரூ. 180 முதல் 200 வரை விற்பனை செய்கின்றமை குறிபிபிடத்தக்கது.

