Tuesday, December 2, 2025 10:04 am
இலங்கையை தாக்கிய டித்வா புயல் காரணமாக ஏற்பட்ட பேரழிவில் இருந்து நாடு மீள்வதற்காக பிரித்தானியா அவசர நிவாரண நிதியாக 890,000 அமெரிக்க டொலர்களை வழங்குவதாக அறிவித்துள்ளது.
இந்த நிதியானது செஞ்சிலுவைச் சங்கம், ஐக்கிய நாடுகளின் இலங்கைக்கான அமைப்பு மற்றும் உள்ளூர் பங்காளிகளுடன் இணைந்து அவசரப் பொருட்கள் மற்றும் உயிர்காக்கும் உதவிகளை வழங்குவதற்காகப் பயன்படுத்தப்படும் என இலங்கைக்கான பிரித்தானிய உயர் ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.

