Saturday, December 6, 2025 3:59 pm
அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட இலங்கை மக்களுக்கு வழங்கப்படும் மனிதாபிமான உதவித் தொகையை பிரித்தானியா ஒரு மில்லியன் ஸ்டெர்லிங் பவுண்டுகளாக அதிகரித்துள்ளது.
இலங்கையில் உள்ள பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயம் இதற்கு முன்னர் 06 இலட்சத்து 75 ஆயிரம் ஸ்டெர்லிங் பவுண்டுகள் உதவியை அறிவித்திருந்த நிலையில் தற்போது ஒரு மில்லியனாக அதிகரித்துள்ளது.
பிரித்தானிய அரசால் வழங்கப்பட்டுள்ள இந்த அவசர பேரிடர் உதவிகள் கடுமையாக பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு விநியோகிக்கப்பட்டு வருகின்றதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

