Tuesday, November 11, 2025 11:44 am
அவுஸ்திரேலியாவில் உள்ள 16 வயதுக்குட்பட்டோர், சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
பேஸ்புக், இன்ஸ்டாகிராம், டிக்டொக், எக்ஸ், யூடியூப், ஸ்னாப்சாட் உள்ளிட்ட சமூக ஊடகங்களின் பயன்பாட்டால், அவுஸ்திரேலியாவில் உள்ள குழந்தைகளின் மன நலம், உடல் நலம் என்பன பாதிக்கப்படுவதாக பிரதமர் அந் தோணி அல்பனீஸ் குறிப்பிட்டிருந்தார்.
சமூக ஊடகங்களின் தடைக்கு எதிர்க்கட்சியினரும் ஆதரவு தெரிவித்த நிலையில், “ஒன்லைன் பாதுகாப்பு திருத்தச் சட்டம் 2024” என்ற பெயரில் சட்டமூலம் ஒன்று தாக்கல் செய்யப்பட்டு, அது நிறைவேற்றப்பட்டுள்ளது.
இந்த சட்டத்தின் மூலம் 16 வயதுக்கு உட்பட்ட சிறுவர்கள், சமூக ஊடகங்களில் கணக்குகளை ஆரம்பிக்கவோ, பயன்படுத்தவோ தடை செய்யப்படுகிறது. எதிர்வரும் டிசம்பர் 10 ஆம் திகதி முதல், இந்த சட்டம் அமலுக்கு வரும் என அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

