Friday, October 24, 2025 11:52 am
யாழ்ப்பாணம் – வடமராட்சி, பருத்தித்துறை மரக்கறி சந்தையை முன்னர் இயங்கிய இடத்திற்கு மாற்றுமாறுகோரி பருதித்துறை வர்த்தக சமூகத்தினர் கவனயீர்ப்பு பேரணி ஒன்றை முன்னெடுத்துள்ளனர்.
பருத்தித்துறை நகரப் பகுதியிலிருந்த அனைத்து வர்த்தக நிலையங்களும் மூடப்பட்டு குறித்த பேரணி இன்று காலை முன்னெடுக்கப்பட்டது.
சுமார் 200 வர்த்தகர்களால் ஆரம்பிக்கப்பட்ட கவனயீர்ப்பு பேரணி, பருத்தித்துறை நவீன சந்தை பகுதியில் இருந்து நகரசபை வரை சென்றடையவுள்ளது.

