Wednesday, January 7, 2026 2:41 pm
நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தனது தாயாரைக் கொச்சைப்படுத்தி மிக மோசமான வார்த்தைகளால் திட்டியதாக அர்ச்சுனா இராமநாதன் இன்று (07) புதன்கிழமை நாடாளுமன்ற அமர்வின் போது முறைப்பாடு அளித்துள்ளார்.
“இனிமேலும் அவருக்கு அருகில் அமர்ந்து என்னால் சபையில் இருக்க முடியாது” எனக் கூறிய அர்ச்சுனா கஜேந்திரகுமாரின் ஆசனத்தை மாற்றுமாறும், நாடாளுமன்ற வரப்பிரசாதக் குழுவிலிருந்து உடனடியாக நீக்குமாறும் சபாநாயகரிடம் அவசர கோரிக்கை விடுத்துள்ளார்.
அவ்வாறு ஆசனம் மாற்றப்படாவிட்டால், சபை நடவடிக்கைகளின் போது அவருக்கு ஏதேனும் இடர்ப்பாடு நேர்ந்தால் அதற்கு தான் பொறுப்பல்ல என அர்ச்சுனா எச்சரிக்கை விடுத்துள்ளதாக தெரிய வந்துள்ளது.

