Wednesday, January 7, 2026 12:17 pm
கிளிநொச்சி கல்மடு நகர் பகுதியில் நேற்று (06) ஆலய வளாகத்தில் சிரமதானப் பணியில் ஈடுபட்டிருந்த இளைஞர் ஒருவர் பாம்பு கடித்து பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.
23 வயதுடைய ஶ்ரீகாந்தன் கிருசிகன் என்ற இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.
குறித்த இளைஞன் உடனடியாக தர்மபுரம் வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டார். ஆனாலும் அவர் வைத்தியசாலைக்கு கொண்டு செல்வதற்கு முன்பே இறந்து விட்டதாக வைத்தியர்கள் அறிவித்திருந்தனர்.
இதனைத் தொடர்ந்து, குறித்த இளைஞனின் சடலம் பிரேத பரிசோதனைக்காக கிளிநொச்சி பொது வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளதோடு, இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை இராமநாதபுரம் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

