இலங்கையில் இரண்டு முன்மொழியப்பட்ட புதுப்பிக்கத்தக்க எரிசக்தி காற்றாலை பண்ணை திட்டங்களில் இருந்து விலகுவதாக அதானி கிரீன் எனர்ஜி லிமிடெட் (ஏஜிஇஎல்)அறிவித்தது.
நீண்ட பேச்சுவார்த்தைகள் மற்றும் திட்டக் குழுக்களின் மறுசீரமைப்பு ஆகியவற்றை மேற்கோள் காட்டி இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மன்னாரிலும், பூனேரியிலும் 484 மெகாவாட் காற்றாலை மின் திட்டங்களை நிறுவுவதற்கு இரண்டு வருடங்களுக்கு மேலாக இலங்கை மின்சார சபை மற்றும் இலங்கை அதிகாரிகளுடன் நிறுவனம் கலந்துரையாடி வந்தது.
ஏஜிஇஎல் ஏற்கனவே சுமார் 5 மில்லியன் டொலரை முன்வளர்ச்சி நடவடிக்கைகளில் முதலீடு செய்திருந்தது மற்றும் மன்னாரின் சுற்றுச்சூழல் அனுமதியைத் தவிர, உச்ச நீதிமன்றத்தின் மதிப்பாய்வின்
2023 பிப்ரவரியில் 442 மில்லியன்டொலர் முதலீட்டிற்கு அரசாங்கத்தின் அனுமதியைப் பெற்ற போதிலும், விதிமுறைகளை மீண்டும் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு புதிய குழுக்களை அமைக்க இலங்கை முடிவு செய்ததால் நிறுவனம் தாமதங்களை எதிர்கொண்டது.
இலங்கையின் இறையாண்மை முடிவுகளுக்கு மதிப்பளித்து, அதானி கிரீன் எனர்ஜியின் வாரியம் இந்த முயற்சியில் இருந்து விலகத் தீர்மானித்தது.
Trending
- 15 ஆண்டுகளுக்கு பின்னர் பாகிஸ்தான் – பங்களாதேஷ் வெளியுறவு செயலாளர்கள் கூட்டம்
- ஏபி, ரொய்ட்டர்ஸ், ப்ளூம்பெர்க் உள்ளிட்ட பிரபல ஊடகங்களுக்கு வெள்ளைமாளிகை தடை
- 200 தெலுங்கு ஊழியர்களை வெளியேற்றிய அமெரிக்க நிறுவனம்
- அதி வேக வீதியில் குழந்தை செலுத்திய கார்
- கண்டியில் 49 பாடசாலைகளுக்கு விடுமுறை
- அமெரிக்க வரிகளால் கடுமையாகப் பாதிப்படைந்த சீன சிறு வணிகங்கள்
- மதுபோதையில் வாகனம் செலுத்திய 800 சாரதிகள் மீது வழக்கு
- முதன்முறையாக பெண்கள் குழு விண்வெளிக்கு பயணம்