Wednesday, December 31, 2025 11:31 am
கிளிநொச்சி பரவிப்பாஞ்சான் வீதியில் இன்று புதன்கிழமை (31) அதிகாலை 5 மணியளவில் சட்டவிரோதமாக மணல் ஏற்றிச் சென்ற டிப்பர் மீது பொலிஸார் ஐந்து தடவை துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்ட சம்பவமொன்று பதிவாகியுள்ளது.
குறித்த டிப்பர் வாகனத்தினை பொலிஸார் மறிக்க முற்பட்டபோதும் அவர்கள் நிறுத்தாது பயணித்துள்ளமையாலே வாகனத்தை துரத்திச்சென்று ஐந்து தடவைகள் துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இருப்பினும் குறித்த வாகனமானது துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்ட நிலையிலும் வீதிகளில் மணலை கொட்டியபடி தப்பியோடியுள்ளது.
இச்சம்பவம் தொடர்பாக பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

