பாலஸ்தீனத்தை ஒரு நாடாக இங்கிலாந்து முறையாக அங்கீகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இஸ்ரேல் சில நிபந்தனைகளை பூர்த்தி செய்யாவிட்டால் இங்கிலாந்து இந்த நடவடிக்கையை மேற்கொள்ளும் என்று ஜூலை மாதம் கூறிய சர் கெய்ர் ஸ்டார்மர் ஞாயிற்றுக்கிழமை அறிவிப்பை வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
காஸாவில் நிலவும் பயங்கரமான சூழ்நிலையை” முடிவுக்குக் கொண்டுவரவும் , போர்நிறுத்தத்திற்கு ஒப்புக்கொள்ளவும், நீண்டகால நிலையான அமைதிக்கு உறுதியளிக்கவும், ஐ.நா. உதவி விநியோகத்தை மீண்டும் தொடங்க அனுமதிக்கவும், மேற்குக் கரையை இணைக்காமல் இருக்கவும் பெஞ்சமின் நெதன்யாகுவின் அரசாங்கத்தை ஸ்டார்மர் கேட்டுக் கொண்டார்.
இஸ்ரேலிய வெளியுறவு அமைச்சு அவரது அறிக்கையை கடுமையாக நிராகரித்தது, தி “ஸ்டார்மர் ஹமாஸின் கொடூரமான பயங்கரவாதத்திற்கு வெகுமதி அளித்து அதன் பாதிக்கப்பட்டவர்களை தண்டிக்கிறார்” என்று நெதன்யாகு கூறினார்.
திங்கட்கிழமை நியூயார்க்கில் நடைபெறும் ஐ.நா. பொதுச் சபைக் கூட்டத்திற்கு முன்னதாக, பாலஸ்தீனத்தை அங்கீகரிக்கும் ஐ.நா.வின் 193 உறுப்பினர்களில் 147 நாடுகளுடன் இங்கிலாந்து இணையும்.