ஒவ்வொரு இலங்கை குடிமகனும் அவரவர் தாய்மொழிகளிலும் சைகை மொழியிலும் அத்தியாவசிய சேவைகளை அணுகக்கூடிய வகையில் தேசிய கொள்கைகள் செயல்படுத்தப்பட வேண்டும் என பிரதமர் ஹரிணி அமரசூரிய வலியுறுத்தியுள்ளார்.
மொழி பிரிவினையை உருவாக்காமல், பல்வேறு பின்னணிகளைச் சேர்ந்த அனைத்து தனிநபர்களையும் ஒன்றிணைக்கும் ஒரு ஊடகத்தை உருவாக்க அனைத்து தரப்பினரும் பாடுபட வேண்டும் என அவர் அழைப்பு விடுத்துள்ளார்.
நீதி மற்றும் தேசிய ஒருங்கிணைப்பு அமைச்சினால் ஏற்பாடு செய்யப்பட்ட தேசிய மொழிகள் வாரமான “நல்லிணக்கத்திற்கான பாதையின்” நிறைவு விழாவில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு கருத்துக்களை தெரிவித்தார்.
“ஒன்றாகப் பேசுங்கள் – ஒன்றாக வாழுங்கள்” என்ற கருப்பொருளின் கீழ் நடத்தப்பட்ட தேசிய மொழிகள் வாரம், தேசிய மொழிகள் தினத்தைக் குறிக்கும் வகையில் ஜூலை 01 ஆம் திகதி ஆரம்பித்து ஏழு நாட்கள் தொடர்ந்தது. நிறைவு விழா பிரதமர் ஹரிணி அமரசூரிய மற்றும் நீதி மற்றும் தேசிய ஒருங்கிணைப்பு அமைச்சர் ஹர்ஷ நாணயக்கார ஆகியோரின் பங்கேற்புடன் நடைபெற்றது.
நிகழ்ச்சியில் மேலும் கருத்துரைகளை வழங்கிய பிரதமர்,
சில சமூகங்கள் நீதிமன்றங்கள், காவல் நிலையங்கள், பாடசாலைகள், அரசு நிறுவனங்கள் அல்லது நிர்வாக அலுவலகங்கள் போன்ற முக்கியமான நிறுவனங்களில் தங்கள் சொந்த மொழியில் தொடர்பு கொள்ள வாய்ப்பு இல்லை என உணர்ந்தால், அது சேவை வழங்கல் தொடர்பான பிரச்சினை மட்டுமல்ல. இதுபோன்ற சூழ்நிலைகளில், மக்கள் தாங்கள் ஒதுக்கப்பட்டதாக உண்மையிலேயே உணரத் தொடங்கலாம். எனவே, அனைத்து இனக்குழுக்களுக்கும் சமமான மொழியியல் உரிமைகள் மற்றும் கண்ணியத்தை உறுதி செய்வது அவசியம்.
எனவே, சிங்கள மற்றும் தமிழ் மாணவர்கள் ஒருவருக்கொருவர் மொழிகளைக் கற்றுக்கொள்ளக்கூடிய பாடசாலைகளையும், நோயாளிகள் தங்களுக்கு மிகவும் வசதியாக உணரும் மொழியில் தங்கள் அறிகுறிகளை வெளிப்படுத்தி மரியாதைக்குரிய சிகிச்சையைப் பெறக்கூடிய வைத்தியசாலைகளையும், குடிமக்கள் தங்களுக்குப் புரியும் மொழியில் நீதி தேடக்கூடிய நீதி அமைப்பையும் நாம் உருவாக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.
Trending
- பாலஸ்தீன தடைக்கு எதிரான போராட்டங்களில் 70க்கும் மேற்பட்டோர் இலண்டனில் கைது
- விம்பிள்டன் சம்பியனானார் இகா ஸ்வியாடெக்
- அம்பாந்தோட்டை பறவை பூங்காவில் 21 சட்டவிரோத மோட்டார் சைக்கிள்களும், கஞ்சாவும் பறிமுதல்
- நெடுந்தீவுக்கு சுற்றுலா சென்ற படகு மூழ்கியது மயிரிழையில் உயிர் தப்பினர் பயணிகள்
- இனங்களுக்கிடையே சம உரிமைகளை உறுதி செய்ய கோரி கையெழுத்து போராட்டம்
- ஜனாதிபதி மாளிகையை பார்வையிட பாடசாலைகளுக்கு வாய்ப்பு
- ஒரு வருடத்தின் பின்னர் மீண்டும் வீனஸ் வில்லியம்ஸ்
- ஜானிக் சின்னரிடம் நோவக் ஜோகோவிச் தோல்வி
Previous Articleதலாய் லாமாவுக்கு பாரத ரத்னா விருது வழங்க 80 எம்.பிக்கள் ஆதரவு
Next Article ட்ரம்புக்கு நோபல் பரிசு நெதன்யாகு பரிந்துரை
Related Posts
Add A Comment
Categorise .
Company .
Address.
- Eekan Media
- Point Pedro Road
- Manthikai
- Jaffna
- Srilanka
- mediaeekan87@gmail.com
Subscribe to Updates
உங்கள் பிரதேசச் செய்திகள் எங்கள் தளத்தில் இடம் பெற விரும்புகிறீர்களா?
© 2025 Eekan Media . Designed by Akkenum Interactive.