இலங்கையின் நிர்வாக கட்டமைப்பில் முக்கிய அதிகாரியாக அறியப்பட்ட பிரட்மன் வீரக்கோன் தனது 94 ஆவது வயதில் காலமானார்.
1954ஆம் ஆண்டில் இலங்கை சிவில் சேவையில் இணைந்து நாட்டின் பல பகுதிகளிலும் பணியாற்றியுள்ளார். பிரதமர் சேர் ஜோன் கொத்தலாவலவின் செயலாளராக பதவியேற்று, பின்னர் 2002 வரை தெரிவான 7 பிரதமர்கள், இரண்டு ஜனாதிபதிகளின் கீழ் செயலாளராக நீண்ட காலம் பணியாற்றியுள்ளார்.
பிரட்மன் வீரக்கோன் தனது ஆரம்பக் கல்வியை களுத்துறை ஹோலி கிரோஸ் கல்லூரியில் மேற்கொண்டார். குருதலாவ புனித தோமஸ் கல்லூரியில் இடைநிலைக் கல்வியைப் பெற்று பேராதனைப் பல்கலைக்கழகத்திற்கு பிரவேசித்தார்.
இவர் கொழும்பு பல்கலைக்கழகத்தில் பொருளாதாரம் மற்றும் சமூகவியலில் கௌரவப் பட்டத்தையும், அமெரிக்காவின் மிச்சிகன் பல்கலைக்கழகத்தில் Fulbright புலமைப்பரிசிலைப் பெற்று சமூகவியலில் முதுகலைப் பட்டம் (MA) பட்டத்தையும் பெற்றுள்ளார்.
Trending
- வடமராட்சி கிழக்கு பிரதேச பண்பாட்டு பெருவிழா
- சந்நிதியான் ஆச்சிரமத்தில் ஆன்மீக சொற்பொழிவுகள்
- இலங்கையில் யானையைப் பாதுகாக்க இளவரசர் வில்லியம்ஸின் ஆதரவை கோரும் சஜித்
- குளியாப்பிட்டி விபத்தில் மாணவர்களும் சாரதியும் பலி
- நடிகை லட்சுமி மேனன் தலைமறைவு
- ஐபிஎல் போட்டிகளிலிருந்து அஸ்வின் ஓய்வு
- ஆறு மில்லியன் மக்கள் இங்கிலாந்தில் புற்றுநோயால் பாதிக்கப்படுவர்
- மருத்துவமனை மீதான தாக்குதலுக்கு ஐ.நா. கண்டனம் தெரிவித்துள்ளார்.