Monday, September 15, 2025 2:27 pm
2029 ஆம் ஆண்டுக்குள் 50 பல்வகை போக்குவரத்து மையங்களை அரசு நிறுவ திட்டமிட்டுள்ளதாக போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க இன்று திங்கட்கிழமை (15) அறிவித்தார்.
புறக்கோட்டை மத்திய பஸ் நிலைய புதுப்பித்தலைத் தொடங்கி வைத்துப் பேசிய அமைச்சர், 2026 ஆம் ஆண்டுக்குள் கொழும்பில் இந்த மையங்களில் 15 மையங்களை அமைப்பதே உடனடி இலக்கு என்று கூறினார்.
பயணிகள் ஒரே இடத்திலிருந்து பஸ், ரயில் , டாக்ஸி சேவைகளை அணுகக்கூடிய ஒருங்கிணைந்த மையங்களாக இந்த மையங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன.
தேசிய வளர்ச்சிக்கு நாட்டின் போக்குவரத்துத் துறையை மேம்படுத்துவது மிக முக்கியமானது என்று அமைச்சர் தெரிவித்தார்.

