இந்திய ஆல்ரவுண்டர் ஷிவம் துபே, கிரிக்கெட் வரலாற்றில் தொடர்ச்சியாக 30 ரி20 சர்வதேச போட்டிகளில் வென்ற முதல் வீரர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார்.
நவம்பர் 3, 2019 அன்று டெல்லியில் பங்களாதேஷுக்கு எதிராக டி20 போட்டியில் அறிமுகமான மும்பையைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர், இன்றுவரை இந்தியாவுக்காக 35 ரி20 போட்டிகளில் விளையாடியுள்ளார்.
தொடக்கம் மோசமாக இருந்தபோதிலும், துபே தனது ஐந்தாவது ரி20 போட்டிக்குப் பிறகு இந்தியா ஒரு ரி20 போட்டியிலும் தோல்வியடையவில்லை.
ஜனவரி 2020 இல் நியூசிலாந்தை 5-0 என்ற கணக்கில் வீழ்த்திய இந்திய அணியில் துபே முக்கிய வீரராக ஐந்து ஆட்டங்களிலும் பங்கேற்றார்.
2024 ஆம் ஆண்டில், அவர் 15 ரி20 போட்டிகளில் விளையாடும் அணியில் இருந்தார், எட்டு ரி20 உலகக் கோப்பைப் போட்டிகளும் அடங்கும், அனைத்திலும் இந்தியா வென்றது.
இங்கிலாந்துக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட தொடருக்கு ஆரம்பத்தில் தேர்வு செய்யப்படவில்லை என்றாலும், துபே ஒரு மாற்றாக அழைக்கப்பட்டு, கடந்த இரண்டு ஆட்டங்களில் இந்தியாவின் வெற்றிகளில் முக்கிய பங்கு வகித்தார்.
துபேவின் சாதனையை இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) அணியான சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) ,சமூக ஊடகங்களில் பதிவிட்டு பாராட்டி கொண்டாடி வருகிறது.
Trending
- அதிவேக வீதிகளில் டெபிட்,கிரெடிட் கார்டு மூலம் பணம் செலுத்தலாம்
- ரணிலுக்கு லஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு அழைப்பாணை
- அதிமுகவுடன் கூட்டணி அறிவித்தார் அமித்ஷா
- உயிருடன் இருப்போரை இறந்ததாக அறிவித்த ட்ரம்ப் நிர்வாகம்
- அவுஸ்திரேலியாவில் இந்திய துணை தூதரகத்தை தாக்கிய மர்ம நபர்கள்
- கயல் நடிகர் பிரபாகரன் மரணம்
- பொன்முடியின் பதவியைப் பறித்த ஸ்டாலின்
- தமிழகத்தில் அமித்ஷா கூட்டணித் தலைவர்கள் சந்திப்பு