முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவில் முன்னிலையாகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
எதிர்வரும் 28ம் திகதி லஞ்ச ஒழிப்பு ஆணையத்திடம் வாக்குமூலம் அளிப்பதற்காக முன்னிலையாகவுள்ளதாக அவரது வழக்கறிஞர் ஆணைக்குழுவிற்கு தெரிவித்துள்ளார்.
புதிய ஜனநாயக முன்னணி நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க தொடர்பில் தெரிவித்த கருத்து தொடர்பில் வாக்குமூலம் ஒன்றை வழங்குவதற்காக அவர் இவ்வாறு முன்னிலையாகவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
எனினும், வெளிநாடு சென்றுள்ள தமது சட்டத்தரணி நாடு திரும்பியதன் பின்னர், கையூட்டல் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவில் முன்னிலையாவதாக ரணில் விக்ரமசிங்க தெரிவித்திருந்தார்.