கென்னிங்டன் ஓவலில் நடந்த இந்தியா , இங்கிலாந்து இடையேயான மூன்றாவது ரி20 போட்டியில் இந்திய கிரிக்கெட் அணி சாதனை புத்தகங்களில் தனது பெயரைப் பொறித்தது.
முன்னதாக, 5 போட்டிகள் கொண்ட இந்த தொடரின் முதல் இரண்டு போட்டிகளிலும் இந்தியா வென்றது.
15வது ஓவரின் முடிவில் விக்கெட் இழப்பின்றி 136 ஓட்டங்கள் எடுத்திருந்த இங்கிலாந்து கிரிக்கெட் அணி, ஆட்ட நேர முடிவில் 0 விக்கெற்களை இழந்து 171 ஓட்டங்கள் எடுத்தது.
171/9 என்ற அளவில் வியத்தகு முறையில் சரிந்தது.
அருந்ததி ரெட்டி , தீப்தி சர்மா ஆகியோர் தலா மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தி, இந்த திருப்பத்தை முன்னெடுத்தனர்.
சர்வதேச கிரிக்கெட்டின் எந்தவொரு வடிவத்திலும் 25 பந்துகளில் ஒன்பது விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் அணியாக இதன் மூலம் இந்திய மகளிர் கிரிக்கெட் அணி பெற்றது.
இது ஆடவர் அல்லது மகளிர் போட்டிகளில் இதற்கு முன் கண்டிராத சாதனையாகும். ஒருபுறம் உலக சாதனை செய்தாலும், போட்டியைப் பொறுத்தவரை 172ஓட்ட இலக்கை எட்ட கடைசி வரை போராடிய இந்தியா 5 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.