2025ம் ஆண்டு உள்ளூராட்சி மன்றத் தேர்தல் மே 06 ஆம் திகதி நடைபெற உள்ளது.
இன்று காலை 06.00 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில், வரவிருக்கும் உள்ளூராட்சித் தேர்தல்கள் தொடர்பான 14 புகார்களை இலங்கை பொலிஸார் பெற்றுள்ளது.
இப் புகார்களில், 01 தேர்தல் வன்முறை தொடர்பாகவும், 13 தேர்தல் சட்ட மீறல்கள் தொடர்பாகவும் பெறப்பட்டுள்ளது.
மார்ச் 03 முதல் ஏப்ரல் 28 வரையிலான காலப்பகுதியில் மொத்தம் 412 தேர்தல் தொடர்பான புகார்களை பொலிஸார் பெற்றுள்ளது.
அவற்றில், 326 தேர்தல் சட்ட மீறல்கள் தொடர்பானவையும், 86 தேர்தல் வன்முறை தொடர்பானவையும் ஆகும்.
இந்த காலகட்டத்தில் மொத்தம் 32 வேட்பாளர்கள் மற்றும் 137 ஆதரவாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மொத்தம் 31 வாகனங்களையும் பொலிஸார் பறிமுதல் செய்துள்ளனர்.