Saturday, October 25, 2025 3:02 pm
2025ம் ஆண்டின் இது வரையான காலப் பகுதியில் நாட்டில் பதிவான விபத்துச் சம்பவங்களில் 2239 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
2025 ஜனவரி முதல் இந்த மாதம் 23 ஆம் திகதி வரையிலான காலப்பகுதியிலேயே இந்த விபத்துச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன. இந்தக் காலப்பகுதியில் 2107 வீதி விபத்துக்கள் இடம்பெற்றதில் 2239 பேர் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

