Saturday, December 13, 2025 11:11 am
பேஸ்புக் விருந்து ஒன்றில் போதைப்பொருள் பாவனையில் ஈடுபட்ட 26 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த விருந்துக்கு பல பிரதேசங்களைச் சேர்ந்த இளைஞர்களும் , யுவதிகளும் வருகை தந்திருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.
தெல்தெனிய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட விக்டோரியா நீர்த்தேக்கத்திற்கு அருகிலுள்ள ஹோட்டல் ஒன்றில் நடத்தப்பட்ட ‘பேஸ்புக் விருந்து’ ஒன்றைச் சுற்றிவளைத்த பொலிஸார், போதைப்பொருட்களுடன் 22 இளைஞர்களையும் 4 யுவதிகளையும் கைது செய்துள்ளனர்.
இன்று சனிக்கிழமை(13) அதிகாலை முன்னெடுக்கப்பட்ட இந்தச் சுற்றிவளைப்பின் போது,பல்வேறு வகையான போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
அதன்படி , ஐஸ் போதைப்பொருள் ஹேஸ் 1875 மி.கி , குஷ் 2769 மி.கி ,4134 மி.கி ,கொக்கேய்ன் 390 மி.கி, மஷ்ரூம் 804 மி.கி , போதை மாத்திரைகள் 13 , சட்டவிரோத சிகரெட்டுகள் 12 ஆகியவை கைப்பற்றப்பட்டன.
சட்டவிரோத சிகரெட்டுகள் – 12 , போதை மாத்திரைகள் – 13 கைது செய்யப்பட்ட இளைஞர்கள் 18 முதல் 31 வயதுக்குட்பட்டவர்கள் என்பதுடன் அவர்கள் கண்டி , ஹோமாகம , தொம்பே , எம்பிலிப்பிட்டிய , முல்லேரியா , ஹட்டன் , பிலகல , அத்துருகிரிய , கொட்டகெதர ,திருகோணமலை மற்றும் ஜா-எல ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்களாவர்.
கைது செய்யப்பட்ட யுவதிகள் 21 முதல் 26 வயதுக்குட்பட்டவர்கள் என்பதுடன் , கண்டி , நீர்கொழும்பு மற்றும் பூண்டுலோயா ஆகிய இடங்களைச் சேர்ந்தவர்களாவர்.
சந்தேகநபர்கள் இன்றைய தினம் தெல்தெனிய நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.
மேலும் , சம்பவம் தொடர்பாகத் தெல்தெனிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
சமூகவலைத்தளம் என்பது சமூகச் சீர்கேட்டுக்கான நுழைவாயில் ஆகிவிட்டதால், எமது சமூகம் விழிப்படைய வேண்டியது இப்போது அவசியமாகியுள்ளது.

