Thursday, December 11, 2025 11:50 am
மொராக்கோவின் ஃபெஸ் நகரில் இரண்டு கட்டிடங்கள் இடிந்து விழுந்ததில் 22 பேர் உயிரிழந்ததுடன், 16 பேர் காயமடைந்துள்ளதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
வட ஆப்ரிக்க நாடான மொராக்கோவில் நான்கு மாடி குடியிருப்பு கட்டடங்களில் இரண்டு இடிந்து விழுந்தது. சம்பவ இடத்திற்கு மீட்பு படையினர் விரைந்து இடிபாடுகளுக்கு மத்தியில் தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கைகளைத் தொடங்கினர்.
இந்த சம்பவத்தில் 22 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 16 பேர் பலத்த காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கட்டடம் இடிந்து விழுந்ததற்கான காரணம் குறித்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

