நேற்று இரவு எஹெலியகொட பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் கத்திக் குத்துச்சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
இச் சம்பவத்தில் ஒருவர் கொல்லப்பட்டதுடன் இருவர் படுகாயமடைந்துள்ளனர்.
கூர்மையான ஆயுதத்தால் தாக்கப்பட்ட மூவரும் ஆரம்பத்தில் எஹெலியகொட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
அவர்களில் ஒருவரான இத்தமல்கொட, கட்டஹட்ட பகுதியைச் சேர்ந்த 22 வயது இளைஞர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
மற்ற இருவரும் மேலதிக சிகிச்சைக்காக இரத்தினபுரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
எஹெலியகொட பொலிஸார் பெற்ற புகாரின் அடிப்படையில் விசாரணையைத் தொடங்கி, சம்பந்தப்பட்ட சந்தேக நபர்களை அடையாளம் கண்டு கைது செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இறந்தவரின் உடல் எஹெலியகொட மருத்துவமனை பிணவறையில் வைக்கப்பட்டுள்ளது.