சண்டிலிப்பாய் மேற்கில் 200 லீற்றர் கோடா மற்றும் 19.5 லீற்றர் கசிப்புடன் சந்தேகநபர் ஒருவரைக் கைது செய்துள்ளதாக மானிப்பாய் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி இ.எஸ் அபயசேகர தெரிவித்தார்.
இது குறித்து மேலும் தெரியவருவதாவது,
மானிப்பாய் பொலிஸ் பிரிவின் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினரால் சண்டிலிப்பாய் மேற்கு பகுதியில் உள்ள வீடொன்றினை முற்றுகையிட்ட பொழுது 200 லீற்றர் கோடா 19.5 லீற்றர் கசிப்பு உட்பட கசிப்பு உற்பத்தி உபகரணங்கள் மற்றும் காஸ் சிலிண்டர் ஆகிய உபகரணங்களை கைப்ற்றியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து 27 வயதான சுன்னாகம் பகுதியினை சேர்ந்த சந்தேகநபர் ஒருவரை கைது செய்து குறித்த நபருக்கு எதிராக மல்லாகம் நீதிவான் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டது.