Saturday, August 16, 2025 11:09 am
இலங்கை மின்சாரசபையின் 20 சதவீத பொறியியலாளர்கள் பொறியாளர்களில் ஐந்தில் ஒரு பங்கு பேர் சிறந்த வாய்ப்புகளுக்காக வெளிநாடுகளுக்கு குடிபெயர்கின்றனர்கடந்த மூன்று ஆண்டுகளில் 226 பேர் அவுஸ்திரேலியா, நியூசிலாந்து , அயர்லாந்து ஆகிய நாடுகளுக்குச் சென்றுள்ளனர். இவர்களில் பெரும்பாலானோர் மின் பொறியாளர்கள் என்று இலங்கை மின்சாரசபையின் செய்தித் தொடர்பாளர் பொறியாளர் எம்.எச். தம்மிகே விமலரத்ன தெரிவித்தார்.
மின்சாரத் துறையில் இலங்கை நிபுணத்துவத்திற்கான உலகளாவிய தேவையையும், தொழில்நுட்ப, தலைமைத்துவ திறன்களுக்கான அவர்களின் வளர்ந்து வரும் அங்கீகாரத்தையும் இந்தப் போக்கு எடுத்துக்காட்டுகிறது என்று அவர் கூறினார்.

