2019 ஆம் ஆண்டு ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்களின் போது தேவாலயங்களை குறிவைத்து நடத்தப்பட்ட குண்டுவெடிப்புகளில் உயிரிழந்த 167 கத்தோலிக்கர்களின் பெயர்கள், வத்திக்கானால், புனிதர்களின் காரணங்களுக்கான டிகாஸ்டரி மூலம் விசுவாச சாட்சிகளின் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன.
கொழும்பு பேராயர் மால்கம் கார்டினல் ரஞ்சித்தின் கூற்றுப்படி, கொச்சிக்கடையில் உள்ள புனித அந்தோணியார் ஆலயம் மற்றும் கட்டுவாபிட்டியில் உள்ள புனித செபாஸ்டியன் தேவாலயம் ஆகியவற்றில் நடந்த குண்டுவெடிப்புகளில் உயிரிழந்தவர்களின் பெயர்கள் சேர்க்கப்பட்டுள்ளன.
ஈஸ்டர் தாக்குதலில் பலியான 167 பேர் வத்திக்கானால் விசுவாச நாயகர்களாகக் கௌரவிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் கூறினார்.
2019 ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாத தாக்குதல்களின் ஆறாவது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில், புனித அந்தோணியார் ஆலயத்தில் இன்று நடைபெற்ற பிரதான நினைவுச் சேவையின் போது மால்கம் கார்டினல் ரஞ்சித் இதை வெளிப்படுத்தினார்
Trending
- பொம்மைக்குள் போதைப்பொருள் கடத்திய பெண் கைது
- செம்மணியில் வடக்கு கிழக்கு சமூக இயக்கத்தின் போராட்டம்
- போலி நாணயத்தாள்களுடன் சீன பிரஜை கைது
- ட்ரம்பின் வரியால் வோக்ஸ்வாகனுக்கு 1.5 பில்லியன்டொலர் இழப்பு
- காஸாவுக்கு உதவ ஜோர்தான் விமானங்கள் தயார்
- அமெரிக்காவில் வெப்பநிலை அதிகரிப்பு
- இலங்கை தொழிலாளிக்காக கண்டனம் தெரிவித்த கொரிய ஜனாதிபதி
- இலங்கையில் அதிகரிக்கிறது சைபர் குற்றம்