Saturday, October 25, 2025 3:57 pm
யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா மாவட்டங்களில் நாளை 26 ஆம் திகதி காலை 6 மணி தொடக்கம் மாலை 7 மணிவரை மின்சாரம் துண்டிக்கப்படும் என மின்சாரசபையின் வடமாகாண பிரதிப் பொதுமுகாமையாளர் எந்திரி எஸ்.பிரபாகரன் அறிவித்துள்ளார்.
வவுனியா – மன்னார் 220 கிலோ வோட் மின் பரிமாற்ற வடத்தினை மாற்றியமைப்பதற்கான வேலைகளிற்காக, வடமாகாணத்திற்கான 132கிலோ வோட் வவுனியா – புதிய அநுராதபுர மின் பரிமாற்ற கட்டமைப்பானது நாளை (ஞாயிற்றுக்கிழமை) காலை 6.00 மணி முதல் மாலை 07.00 மணி வரை துண்டிக்கப்படவுள்ளது.
யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு மற்றும் வவுனியா மாவட்டங்கள் முழுவதும்
மின் விநியோகம் துண்டிக்கப்படும். வேலைகள் பூர்த்தியானவுடன் மின் இணைப்பானது உடனடியாக மீள வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

