க.பொத.சாதாரண தரப் பரீட்சை வெளியாகிய நிலையில் மூளாய் சைவப்பிரகாச வித்தியாலயத்தில் 117 வருடங்களிற்குப் பின்னர் முதல்முறை மாணவி ஒருவர் 9A சித்தியைப் பெற்றுள்ளார்.
மூளாய் சைவப்பிரகாச வித்தியாலயத்தில் கல்விகற்று வந்த ஜெகதீஸ்வரன் நிரோஜா என்ற மாணவியே 9A பெறுபேற்றைப் பெற்று பாடசாலைக்குப் பெருமை சேர்த்துள்ளார்.
கிராமப்புறத்தில் உள்ள மூளாய் சைவப்பிரகாச வித்தியாலயம் பல காலங்களாக பொருளாதாரம் குன்றிய நிலையில் காணப்பட்டு வருகின்ற நிலையிலேயே குறித்த மாணவி 9A சித்தியைப் பெற்றுள்ளார்.
பாடசாலை ஸ்தாபிக்கப்பட்டு 117 வருடங்கள் ஆகின்ற நிலையில் பாடசாலை வரலாற்றில் குறித்த மாணவி இந்த சாதனையைப் பெற்றுள்ளார்.
மாணவியின் சாதனையை நேர்காணல் செய்த போது அவர் தெரிவிக்கையில்,
ஆரம்பக்கல்வி முதல் இற்றை வரையான கற்கையை மூளாய் சைவப்பிரகாச வித்தியாசாலையில் கற்று வந்தேன். எனது கல்விக்கு முற்றுமுழுதான ஆதரவை முதலில் பெற்றோர் வழங்கினர். அதைத் தொடர்ந்து பாடசாலையில் கற்பித்த ஆசிரியர்களும் அதிபர்களும் சக நண்பர்களும் மிகப் பெரும் ஆதரவு வழங்கினர்.
பாடசாலையில் குறிப்பிட்ட சில பாடங்களுக்கு ஆசிரியர்கள் இல்லாதிருந்த போதும் எனது சுயகற்றல் மூலம் நான் இந்தப் பெறுபேற்றைப் பெற்றுள்ளேன். எந்தவொரு தனியார் கல்விநிலையங்களுக்கும் செல்லாமல் பாடசாலையிலும் எனது சுயகற்றலிலும் மட்டுமே கற்று இந்தப் பெறுபேற்றைப் பெற்றுள்ளேன் என தெரிவித்தார்.
Trending
- உயர்மட்ட தொழில்நுட்ப தலைமை நிர்வாகிகளுக்கு வெள்ளை மாளிகையில் ஜனாதிபதி ட்ரம்ப் விருந்து!
- மாத்தறையில் மூதாட்டி ஒருவர் கொடூரமாக கொலை
- தமிழகத்திலிருந்து நல்லூருக்கு வந்த கலைஞர்கள்
- எல்ல பஸ் விபத்து : ஜீப் வாகன சாரதி கைது
- எல்ல பஸ் விபத்து : மீட்புபணியில் ஹெலிகொப்டர்கள்
- எல்ல பஸ் விபத்தில் இதுவரை 15 பேர் பலி
- 16 வயதுக்குட்பட்டவர்களுக்கு எனர்ஜி பானங்கள் தடை
- சிறப்பு முத்திரை வெளியிடப்பட்டது