சிங்கப்பூரில் உள்ள தமிழ் உணர்வாளரது நிதிப் பங்களிப்பில் யாழ்ப்பாண மாவட்டத்தில் திருமண வயதை எட்டியும் பொருளாதார நிலை காரணமாக இல்லற வாழ்வில் இணைய முடியாதிருக்கும் 108 சோடிகளுக்கு திருமணம் செய்துவைக்கப்படவுள்ளதாக யாழ்ப்பாண வர்த்தக சங்கத் தலைவரும் வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினருமான இ. ஜெயசேகரம் தெரிவித்துள்ளார்.
ஊடக சந்திப்பொன்றில் அவர் மேலும் கூறுகையில்,
சிங்கப்பூரை வதிவிடமாக கொண்ட TT. துரை சுமதினியின் பங்களிப்பிலேயே 108 தம்பதியினருக்கு திருமணம் செய்துவைக்கப்பவுள்ளது தாலி, சீதனம் உள்ளிட்ட அனைத்தும் தம்பதியினருக்கு வழங்கப்பட்டு தொண்டமனாறு செல்வச் சந்நிதியான் ஆலயத்தில் எதிர்வரும் செவ்வாழ்க் கிழமையன்று 108 தம்பதியினருக்கும் திருமணம் செய்து வைக்கப்படும் என்றார்.