ஈழத்தின் வரலாற்று சிறப்பு மிக்க தொண்டைமானாறு ஸ்ரீ செல்வச்சந்நிதி முருகன் ஆலய வருடாந்த தேர்த்திருவிழா இன்று சனிக்கிழமை (06) சிறப்பாக இடம்பெற்றது.
கடந்த 23ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமான ஆற்றங்கரை வேலவனின் மகோற்சவ திருவிழா தொடர்ந்து 14 நாட்கள் நடைபெற்று இன்று 15 ஆம் நாளான தேர்த்திருவிழா இடம்பெற்றது.
இன்று நடைபெற்ற தேர்த்திருவிழாவில், பெருந்திரளான மக்கள் கலந்து கொண்டதுடன், பல பக்த அடியார்கள் காவடிகள், கற்பூர சட்டிகள் எடுத்தும், அங்க பிரதிஸ்ட்டை செய்தும் தமது நேர்த்திக்கடன்களை நிறைவேற்றினர்.
அன்னதானக் கந்தனின் தீர்த்தத் திருவிழா நாளை நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


