பங்களாதேஷில் நோபல் பரிசு பெற்ற முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசாங்கம், நாட்டின் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தின் கீழ் ஷேக் ஹசீனாவின் அவாமி லீக்கை முறையாகத் தடை செய்துள்ளது.
சனிக்கிழமை (மே 10) மாலை ஆலோசகர்கள் குழுவின் அறிக்கையின் மூலம் வெளியிடப்பட்ட இந்த அறிவிப்பு, நாட்டில் இடைக்கால அரசு உருவான பிறகு நடக்கும் அரசியல் மறுசீரமைப்பில் குறிப்பிடத்தக்க மாற்றத்தைக் குறிக்கிறது.
இந்தத் தடை அடுத்த வேலை நாளில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு மூலம் வெளியிடப்படும். ஷேக் ஹசீனாவின் அரசாங்கத்தை கவிழ்த்த 2024 ஆம் ஆண்டு போராட்டத்திற்கு பிறகு உருவான மாணவர் தலைமையிலான தேசிய குடிமக்கள் கட்சியின் (என்சிபி) தொடர்ச்சியான போராட்டங்களைத் தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டது.
அவாமி லீக்கை தடை செய்யும் இந்த நடவடிக்கைக்கான சட்ட அடிப்படையை ஆதரிக்க, ஆலோசகர்கள் கவுன்சில் பங்களாதேஷில் சர்வதேச குற்ற தீர்ப்பாயம் (ஐசிடி) சட்டத்தை திருத்தியது.
இதன் மூலம், அரசியல் கட்சிகள் மற்றும் அதனுடன் தொடர்புடைய அமைப்புகள் மீது வழக்குத் தொடர அனுமதித்தது.
தேசிய பாதுகாப்பை உறுதி செய்வதற்கும், அவாமி லீக் தலைவர்களுக்கு எதிரான தொடர்ச்சியான விசாரணைகளில் ஈடுபடும் சாட்சிகளைப் பாதுகாப்பதற்கும் இந்தத் தடை அவசியம் என்று முகமது யூனுஸ் அரசாங்கம் கூறியது.இதற்கிடையே, பிரதான எதிர்க்கட்சியான பங்களாதேஷ் தேசியவாதக் கட்சி (பிஎன்பி) எந்த அரசியல் கட்சியையும் தடை செய்வது தவறு என எச்சரித்துள்ளது.
Trending
- நடிகை லட்சுமி மேனன் தலைமறைவு
- ஐபிஎல் போட்டிகளிலிருந்து அஸ்வின் ஓய்வு
- ஆறு மில்லியன் மக்கள் இங்கிலாந்தில் புற்றுநோயால் பாதிக்கப்படுவர்
- மருத்துவமனை மீதான தாக்குதலுக்கு ஐ.நா. கண்டனம் தெரிவித்துள்ளார்.
- விஜய் உட்பட பலர் மீது வழக்கு தாக்கல்
- ரணிலுக்கு பிணை வழங்கிய நீதிமன்றம்
- யாழில் இரத்த வாந்தி எடுத்த குடும்பஸ்தர் உயிரிழப்பு
- சதை உண்ணும் ஒட்டுண்ணி தொற்று ஏற்பட்ட முதல் மனிதர் கண்டுப்பிடிப்பு