அசாம் மாநிலத்தில் விவாகரத்து பெற்ற ஆண் ஒருவர் பாலில் குளித்து, கொண்டாடும் வீடியோ வைரலான அதே சமயத்தில், கேரளாவில் விவாகரத்து பெற்ற பெண்கள், குழுவாக சேர்ந்து சுற்றுலா சென்று விவாகரத்தை கொண்டாடி உள்ளனர்.
கோழிக்கோடு பகுதியை சேர்ந்த ரபியா அபி, விவாகரத்து பெற்ற பெண்களுக்கான குழு ஒன்றை உருவாக்கி, சுற்றுலா செல்வதற்கான ஏற்பாடுகளை செய்தார். மாநிலம் முழுவதிலும் இருந்து பல இளம்பெண்கள், இதற்கு சம்மதம் தெரிவித்து சுற்றுலாவில் பங்கு பெற்றனர்.
அவர்கள் ஆட்டம் பாட்டம், கொண்டாட்டம் என்று மகிழ்ச்சியாக பொழுதை கழித்தனர். தங்களுக்கு விவாகரத்தான காரணம் பற்றி மற்ற பெண் தோழிகளிடம் பகிர்ந்து கொண்டனர்.
விவாகரத்தான பெண்களுக்கு வேடிக்கை பயணமாகவும் மற்றும் புதிய நம்பிக்கை, உறவுகளை உருவாக்கும் பயணமாகவும் இது அமைந்ததாக அவர்கள் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டனர். அவர்கள் கொண்டாடும் வீடியோ வலைத்தளவாசிகளை வெகுவாக கவர்ந்தது.
Trending
- நாட்டில் 24 மணிநேரத்தில் வாகன விபத்துக்களில் 6 பேர் பலி
- கைதானவர்களை அழைத்துவர இந்தோனேசியா சென்ற விசேட பொலிஸ் குழு
- செம்மணியில் கட்டியணைத்தவாறு இரு எலும்புக்கூட்டு தொகுதிகள் அடையாளம்
- வலிந்து காணாமலாக்கப்பட்டவர்கள் தினம் : யாழில் மாபெரும் ஆர்ப்பாட்ட பேரணி
- சாவகச்சேரியில் இடித்து அகற்றப்பட்ட சுமைதாங்கி
- ஈட்டி எறிதலில் லெகாம்கேவிற்கு தங்கம்
- பருத்தித்துறை பிரதேச சபை ஏல்லைக்குள் பொலித்தீனுக்குத் தடை
- காபூலில் ஆளில்லா விமானத் தாக்குதல்கள் பாகிஸ்தான் மீது குற்றச்சாட்டு