அதீத ஆன்மீக ஆர்வம் காரணமாக இந்திய இலங்கை கடற்பரப்பில் நீந்திச் செல்ல முயன்ற அமெரிக்க பிரஜை ஒருவர் சிறை தண்டனையிலிருந்து தப்பியுள்ளார்.
பாக்கு நீரணைப் பகுதியில் இருக்கும் ‘ராமர் பாலத்தை’ காணும் ஆர்வத்துடன் இந்தியாவின் தென் கோடியிலிருந்து நீந்திச் செல்ல முற்பட்ட அந்த நபர், தமிழக கரையோரக் காவல்படையால் பிடிக்கப்பட்டார்.
தனுஷ்கோடி கடல்வழியாக இராமர் தீடைகள் நோக்கி நீந்திச் செல்ல முற்பட்ட போதே அந்த அமெரிக்கப் பிரஜை தமிழக பொலிசாரால் பிடிக்கப்பட்டுள்ளார்.
அமெரிக்கா மிஸ்ஸிஸ்ஸிப்பியை சேர்ந்த லூசிபர் எவெரிலவ், தனுஷ்கோடி பகுதியில் இன்று (24) காலை 10.00 மணி அளவில் கடலில் இறங்கி ராமர் பாலம் செல்வதாக நீந்திச் செல்ல முயன்றார்.
அப்போது தமிழக கடலோர காவல்துறையினர் பிடித்து தமது விசாரணை நிலையத்திற்கு கொண்டு சென்று விசாரித்தனர்.
விசாரணையில் மேற்படி அமெரிக்கப் பிரஜை ஆன்மீக பயணமாக உத்திரபிரதேசம் கும்பமேளாவிற்கு சென்று அங்கிருந்து ராமேஸ்வரத்துக்கு வந்ததாகவும் பின் கன்னியாகுமரி செல்ல இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
அவரது ஆவணங்களை சரி பார்த்து பின்னர் தனுஷ்கோடி கடல் பகுதி தடை செய்யப்பட்ட பகுதி எனவும் மீண்டும் அதில் நீந்த முயற்சிக்க வேண்டாம் என எச்சரித்து அவரை பொலிஸார் திருப்பி அனுப்பியுள்ளனர்.
Trending
- தீபாவளியை முன்னிட்டு விசேட போக்குவரத்துச் சேவைகள் ஆரம்பம்
- 2025 ஆசிய ரக்பியில் உஸ்பெகிஸ்தானை வீழ்த்திய இலங்கை
- ரசிய – இந்திய எண்ணெய் வர்த்தகம், ட்ரம்பின் அறிவிப்பில் குளறுபடியா?
- சுக்கிரன் சொந்த ராசிக்கு செல்வதால் தீபாவளிக்கு பின் இந்த 3 ராசிகளுக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப் போகுதாம்
- 2026 முதல் நடைமுறையாகும் புதிய கல்விச் சீர்திருத்தம்
- இலங்கை உணவுக்கு உலக அளவில் பாராட்டு
- ChatGPT க்கு போட்டியாக களமிறங்கிய இந்திய செயலி
- அதிரடியாக குறைந்த தங்கத்தின் விலை