ரஷ்யாவில் நெடுஞ்சாலை மேம்பாலம் ஒன்று இடிந்து ரயில் மேல் விழுந்ததில் குறைந்தது ஏழு பேர் இறந்துள்ளனர்.
மேலும், 31 பேர் காயமடைந்துள்ளனர்.
இவ் விபத்தானது உக்ரேனிய எல்லையிலிருந்து சுமார் 100 கிலோமீட்டர் தூரத்தில் நடைபெற்றது.
பிரையன்ஸ்கில் உள்ள பாலம் இடிந்து விழுந்ததில் பல கனரக லொறிகள் ரயிலில் மோதியன.
ரயிலில் பயணித்தவர்களைக் கண்டுபிடிக்க தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினர் முயற்சித்து வருவதாக ரஷ்ய அவசரகால அமைச்சகம் தெரிவித்துள்ளது.