தேசிய மக்கள் சார்பாக யாழ்.மாவட்டத்தில் உள்ளூராட்சி மன்றங்களுக்கு தெரிவாகியுள்ள உறுப்பினர்களுக்கான சத்தியப்பிரமாணம் செய்யும் நிகழ்வு யாழ்ப்பாணத்திலுள்ள தனியார் விடுதியில் நேற்று (31) பிற்பகல் இடம்பெற்றது.
கடற்றொழில் நீரியல்வளத்துறை அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில், பாராளுமன்ற உறுப்பினர்களான ஸ்ரீபவானந்தராஜா, கருணநாதன் இளங்குமரன், இ.றஜீவன், விரிவுரையாளர் கபிலன், சட்டத்தரணி தேவராசா, உள்ளூராட்சி மன்றங்களுக்கு தெரிவாகியுள்ள உறுப்பினர்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
யாழ்.மாவட்டத்தில் தேசிய மக்கள் சக்திக்கு 81 ஆசனங்கள் கிடைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.