இன்று யாழ்.போதனா வைத்தியசாலையின் பாதுகாப்பு உத்தியோகஸ்தர்கள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
சம்பள உயர்வு கோரியும், தற்போது பிறிதொரு நிறுவனம் ஒன்று எம்மை பொறுப்பெடுக்க வேண்டிய நிலையில் அந்நிறுவனம் எம்மை உரிய முறையில் பொறுப்பெடுக்கவில்லை உடனடியாக அந்நிறுவனம் எம்மை பொறுப்பெடுக்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை முன்வைத்தே போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
பாதுகாப்பு உத்தியோகஸ்தர்களின் போராட்டம் காரணமாக, வைத்தியசாலையின் பாதுகாப்பு மற்றும் நோயாளிகளின் பாதுகாப்பு என்பன கேள்வுக்குள்ளாகியுள்ளது.
அத்துடன், நோயாளர்களை பார்வையிட வருவோர் கட்டுப்பாடுகள் இன்றி வைத்தியசாலை விடுதிகளுக்கு செல்வதனால் நோயாளிகளும் அசௌகரியங்களுக்கு உள்ளாகுவதுடன், சிகிச்சை வழங்குவதிலும் நெருக்கடி நிலைமை காணப்படுகிறது.