இலங்கைத் தமிழரசுக் கட்சிக்கும் தமிழத் தேசிய மக்கள் முன்னணிக்கும் இடையில் விசேட சந்திப்பொன்று யாழில் நேற்று இடம்பெற்றது.
உள்ளூராட்சி சபைகளில் ஆட்சியமைப்பது தொடர்பில் கலந்துரையாடுவதற்கு இந்தச் சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
இச் சந்திப்பில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் சார்பில் அதன் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் செயலாளர் செல்வராசா கஜேந்திரன் அதேபோன்று தமிழரசுக் கட்சியின் சார்பில் அதன் பதில் தலைவர் சீ.வீ.கே.சிவஞானம் மற்றும் செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.