இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் உள்ளூராட்சி மன்ற தேர்தல் பிரசார கூட்டம் நேற்று சுன்னாத்தில் இடம்பெற்றது.
நேற்று பிற்பகல் சுன்னாகத்தில் உள்ள தனியார் விருந்தினர் மண்டபம் ஒன்றில் வலிகாமம் தெற்கு பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் தியாகராசா பிரகாஸ் தலைமையில் குறித்த கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்தில் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பதில் தலைவர் சி.வி.கே.சிவஞானம், பொதுச் செயலாளளர் எம்.ஏ.சுமந்திரன், மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா சாணக்கியன், கட்சியின் பிரதேச சபை வேட்பாளர்கள் பொதுமக்கள் என பலர் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.