Friday, February 20, 2026 10:20 am
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் மனைவி மைத்திரி விக்ரமசிங்கவை இன்று குற்றப் புலனாய்வுத் துறையின் நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவில் முன்னிலையாகுமாறு அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது. எனினும் இன்று விசாரணைக்கு அவர் முன்னிலையாக முடியாது என்று பிரிவுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அவர் முன்னிலையாக முடியாததற்கான குறிப்பிட்ட காரணம் எதுவும் தெரிவிக்கப்படவில்லை. ஆனால் உடல்நலக் காரணங்களால் வருகை தரவில்லை என்று கூறப்படுகிறது.
மைத்திரி விக்ரமசிங்கவுக்கு வழங்கப்பட்ட அழைப்பாணை குறித்து குற்றப் புலனாய்வுத் துறை கடந்த 18 ஆம் திகதி கொழும்பு கோட்டை நீதிவான் நீதிமன்றத்திற்கு அறிவித்தது. அதன்படி அவர் இன்று குற்றப் புலனாய்வுத் துறையின் நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவில் முன்னிலையாகவிருந்தார்.
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் நடத்தப்படும் விசாரணை தொடர்பாக வாக்குமூலம் பதிவு செய்வதற்காக மைத்திரி விக்ரமசிங்க நிதி குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு அழைக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.

