இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று வியாழக்கிழமை (27) உலக விவகாரங்கள் தொடர்பில் முக்கிய உரை நிகழ்த்துவதற்காக புதுடில்லிக்கு புறப்பட்டார்.
புது டில்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் நாளை வெள்ளிக்கிழமை (28)இராஜதந்திரிகள் சிறப்பு விருந்தினர்கள் பங்கேற்கும் உரை நடைபெறும். இந்திய பிரதமர் நரேந்திர மோடி, முன்னாள் கனடா பிரதமர் ஸ்டீபன் ஹார்பர், அவுஸ்திரேலிய முன்னாள் பிரதமர் டோனி அபோட் ஆகியோரும் பேச உள்ளனர்.
விக்கிரமசிங்கவின் உரை தெற்காசியாவின் புவிசார் அரசியல் நிலப்பரப்பு, பொருளாதார சவால்கள் மற்றும் பிராந்திய ஒத்துழைப்பு தொடர்பாகக் கவனம் செலுத்தும்.
முன்னாள் ஜனாதிபதி, பிரதமர் மோடியுடன் ரணில் கலந்துரையாடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இருதரப்பு மற்றும் பிராந்திய விவகாரங்கள் குறித்து அவர்களின் சந்திப்பில் விவாதிக்கப்படும் என அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. விக்கிரமசிங்க தனது விஜயத்தின் போது முக்கிய இந்திய வர்த்தக தலைவர்களையும் சந்திப்பார்.
Trending
- தமிழ் மொழிக்கு நினைவு சின்னம் ஏ.ஆர்.ரஹ்மான் அறிவிப்பு
- பாரதீய ஜனதா கூட்டணியால் அமைதிகாக்கும் ஜெயக்குமார்
- பாபா முத்திரையுடன் ஆன்மீக பயணம் சென்ற அண்ணாமலை
- மீண்டும் சர்ச்சையில் சிக்கிய ஆளுநர் ஆர்.என்.ரவி
- கணித ஒலிம்பியாட்டில் வெற்றி பெற்ற யாழ்ப்பாண மாணவர்கள்
- பயங்கரவாதத் தடைச் சட்டம் ஒழிக்கப்படும் – பிரதமர் ஹரிணி
- சிட்னி முருகன் ஆலயத்தில் புத்தாண்டு வழிபாடு
- அல்-அஹ்லி மருத்துவமனை செயல்பாடுகள் நிறுத்தம்