இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று வியாழக்கிழமை (27) உலக விவகாரங்கள் தொடர்பில் முக்கிய உரை நிகழ்த்துவதற்காக புதுடில்லிக்கு புறப்பட்டார்.
புது டில்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் நாளை வெள்ளிக்கிழமை (28)இராஜதந்திரிகள் சிறப்பு விருந்தினர்கள் பங்கேற்கும் உரை நடைபெறும். இந்திய பிரதமர் நரேந்திர மோடி, முன்னாள் கனடா பிரதமர் ஸ்டீபன் ஹார்பர், அவுஸ்திரேலிய முன்னாள் பிரதமர் டோனி அபோட் ஆகியோரும் பேச உள்ளனர்.
விக்கிரமசிங்கவின் உரை தெற்காசியாவின் புவிசார் அரசியல் நிலப்பரப்பு, பொருளாதார சவால்கள் மற்றும் பிராந்திய ஒத்துழைப்பு தொடர்பாகக் கவனம் செலுத்தும்.
முன்னாள் ஜனாதிபதி, பிரதமர் மோடியுடன் ரணில் கலந்துரையாடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இருதரப்பு மற்றும் பிராந்திய விவகாரங்கள் குறித்து அவர்களின் சந்திப்பில் விவாதிக்கப்படும் என அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. விக்கிரமசிங்க தனது விஜயத்தின் போது முக்கிய இந்திய வர்த்தக தலைவர்களையும் சந்திப்பார்.
Trending
- டிஜிட்டல் பிறப்பு சான்றிதழ் வழங்கும் செயற்றிட்டம்
- பாலியல் வன்கொடுமை குற்றம் சுமத்தப்பட்ட கனடிய வீரர்கள் விடுதலை
- உலகின் மிகச்சிறிய பாம்பு 20 ஆண்டுகளுக்குப் பிறகு கண்டுபிடிக்கப்பட்டது
- ட்ரம்பின் தடையால் திருநங்கை கேடட்டின் கனவு தடைப்பட்டது
- ஜனாதிபதி மாலைதீவுக்கு உத்தியோகபூர்வ விஜயம்
- ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் : பிரதமர் பதிலளிப்பு
- 219 மருந்து விற்பனை நிலையங்களின் உரிமம் இடைநிறுத்தம்
- இலங்கை, பிரான்ஸ் வெளிநாட்டுக் கடன் மறுசீரமைப்பு கைச்சாத்து