இலங்கையின் நிர்வாக கட்டமைப்பில் முக்கிய அதிகாரியாக அறியப்பட்ட பிரட்மன் வீரக்கோன் தனது 94 ஆவது வயதில் காலமானார்.
1954ஆம் ஆண்டில் இலங்கை சிவில் சேவையில் இணைந்து நாட்டின் பல பகுதிகளிலும் பணியாற்றியுள்ளார். பிரதமர் சேர் ஜோன் கொத்தலாவலவின் செயலாளராக பதவியேற்று, பின்னர் 2002 வரை தெரிவான 7 பிரதமர்கள், இரண்டு ஜனாதிபதிகளின் கீழ் செயலாளராக நீண்ட காலம் பணியாற்றியுள்ளார்.
பிரட்மன் வீரக்கோன் தனது ஆரம்பக் கல்வியை களுத்துறை ஹோலி கிரோஸ் கல்லூரியில் மேற்கொண்டார். குருதலாவ புனித தோமஸ் கல்லூரியில் இடைநிலைக் கல்வியைப் பெற்று பேராதனைப் பல்கலைக்கழகத்திற்கு பிரவேசித்தார்.
இவர் கொழும்பு பல்கலைக்கழகத்தில் பொருளாதாரம் மற்றும் சமூகவியலில் கௌரவப் பட்டத்தையும், அமெரிக்காவின் மிச்சிகன் பல்கலைக்கழகத்தில் Fulbright புலமைப்பரிசிலைப் பெற்று சமூகவியலில் முதுகலைப் பட்டம் (MA) பட்டத்தையும் பெற்றுள்ளார்.
Trending
- ரணிலுக்கு பிணை வழங்கிய நீதிமன்றம்
- யாழில் இரத்த வாந்தி எடுத்த குடும்பஸ்தர் உயிரிழப்பு
- சதை உண்ணும் ஒட்டுண்ணி தொற்று ஏற்பட்ட முதல் மனிதர் கண்டுப்பிடிப்பு
- வடக்கு மாகாண சபைக்கு அதிகளவு நிதி ஒதுக்கீடு
- தாவடியில் 21 வயது இளைஞன் போதை மாத்திரையுடன் கைது
- கொழும்பில் கலகம் தடுக்கும் படைகள் குவிப்பு
- பாதுகாப்பு பலப்படுத்தப்பட்ட கொழும்பு தேசிய வைத்தியசாலை வளாகம்
- ரணிலை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த முடியாது : சிறைச்சாலைகள் ஆணையாளர்