உயிருக்கு ஆபத்தான நிலைமைகள் இருப்பதாக அடையாளம் காணப்பட்ட மக்கள் பிரதிநிதிக , பிற நபர்களின் உயிரைப் பாதுகாக்க காவல்துறை அல்லது சிறப்புப் பாதுகாப்பு வழங்கப்படுகிறது.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு வழங்கப்படும் பாதுகாப்பு குறைக்கப்பட்டது குறித்து சமூகத்தில் விவாதம் நடைபெற்று வரும் நிலையில், சமீபத்தில் மற்றொரு முன்னாள் அமைச்சருக்கு வழங்கப்படும் பாதுகாப்பு குறித்து கேள்விகள் எழுப்பப்பட்டன.
‘உங்களிடம் இல்லாத பாதுகாப்பு டிரான் அவர்களுக்கு ஏன் இருக்கிறது?’
அண்மையில் நடந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்க நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின் போது, முன்னாள் பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸுக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பு குறித்து கேள்விகள் எழுப்பப்பட்டன.
அந்த நேரத்தில், ஒரு பத்திரிகையாளர் அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸவிடம், “உங்களுக்கே இல்லாத எஸ்.டி.எஃப் பாதுகாப்பு டிரான் அலஸுக்கு எந்த அடிப்படையில் வழங்கப்பட்டுள்ளது?” என்று கேட்டார்.
இதற்கு பதிலளித்த அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ, புலனாய்வுத் தகவல்களின் அடிப்படையில் உயிருக்கு ஆபத்தில் இருப்பதாக நம்பப்படும் நபர்களுக்கு பாதுகாப்பு வழங்கப்படும் என்று கூறினார்.
முன்னாள் அமைச்சர் டிரான் அலஸின் பாதுகாப்பிற்காக 19 பொலிஸ் சிறப்புப் படை (STF) உறுப்பினர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக இலங்கை பொலிஸ் சிறப்புப் படையின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
முன்னாள் பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ், பாதாள உலக உறுப்பினர்களிடமிருந்து தனக்கு அச்சுறுத்தல்கள் வந்ததாக உளவுத்துறை அறிக்கைகள் கிடைத்ததாக 2022 ஆம் ஆண்டு மே மாதம் தெரிவித்திருந்தார்.
ஏகன் மீடியா,ஏகன்,இலங்கை,கொழும்பு
Trending
- ரணிலுக்கு பிணை வழங்கிய நீதிமன்றம்
- யாழில் இரத்த வாந்தி எடுத்த குடும்பஸ்தர் உயிரிழப்பு
- சதை உண்ணும் ஒட்டுண்ணி தொற்று ஏற்பட்ட முதல் மனிதர் கண்டுப்பிடிப்பு
- வடக்கு மாகாண சபைக்கு அதிகளவு நிதி ஒதுக்கீடு
- தாவடியில் 21 வயது இளைஞன் போதை மாத்திரையுடன் கைது
- கொழும்பில் கலகம் தடுக்கும் படைகள் குவிப்பு
- பாதுகாப்பு பலப்படுத்தப்பட்ட கொழும்பு தேசிய வைத்தியசாலை வளாகம்
- ரணிலை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த முடியாது : சிறைச்சாலைகள் ஆணையாளர்