Thursday, February 5, 2026 2:45 pm
முத்துராஜவெல சதுப்பு நிலங்களைப் பாதுகாக்க முத்துராஜவெல மேம்பாட்டு ஆணையத்தை நிறுவுமாறு கொழும்பு பேராயர் கார்டினல் மால்கம் ரஞ்சித் இன்று வியாழக்கிழமை [5] அரசாங்கத்திடன் வேண்டுகோள் விடுத்தார்.
பேராயர் மாளிகையில் நடைபெற்ற கலந்துரையாடலில், ஈரநிலங்கள் கம்பஹா மாவட்டத்தின் இயற்கையான வடிகால் அமைப்பை உருவாக்குகின்றன. அங்கீகரிக்கப்படாத கட்டுமானங்களைத் தொடர்வது மாவட்டத்தில் எதிர்காலத்தில் வெள்ள அபாயத்தை அதிகரிக்கக்கூடும் என்று அவர் எச்சரித்தார்.
கூட்டத்தில் துணை அமைச்சர் மஹிந்த ஜெயசிங்கவும், பிற அரசு அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

