மீரிகம பகுதியில் வாகன விபத்து ஒன்று இடம்பெற்றுள்ளது.
இவ் விபத்தில் கனேகொட பிரதேசத்தைச் சேர்ந்த 56 வயதுடைய ஒருவர் உயிரிழந்துள்ளார்.
மீரிகமவில் இருந்து கிரிஉல்ல பக்கம் பயணித்த லொறியொன்று மோட்டார் சைக்கிள் ஒன்றை முந்திச் செல்ல முற்பட்ட போது இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக மீரிகம பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்தில் மோட்டார் சைக்கிளில் வந்தவர் காயமடைந்ததுடன் மீரிகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.
அவரது உடல் மீரிகம வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதோடு லொறியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மீரிகம பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.