கணினி தொழில்நுட்ப நிறுவனமான மைக்ரோசொப்ட் இந்த ஆண்டில் மாத்திரம் நான்காவது முறையாக மீண்டும் ஊழியர்கள் பணிநீக்கம் செய்ய நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. புதன்கிழமை (02.07.2025) ஏராளமானவர்களுக்கு பணிநீக்க முன்னெச்சரிக்கை கடிதங்களை அனுப்பியது. எவ்வளவு பேர் பணிநீக்கம் செய்யப்படுகிறார்கள் என்று அந்த நிறுவனம் வெளிப்படையாக அறிவிக்கவில்லை.
கடந்த ஜனவரி மாதம் ஒரு சதவீத ஊழியர்களை பணிநீக்கம் செய்தது. கடந்த மே மாதத்தில் 6000 பேரும் கடந்த ஜூன் மாதம் 305 பேரும் பணிநீக்கம் செய்யப்பட்டனர்.
இந்த நிலையில் புதன்கிழமை மீண்டும் பணிநீக்க அறிவிப்புகள் வெளியாகியுள்ளன. புளூம்பெர்க் நிறுவன அறிக்கையின்படி இந்த முறை மைக்ரோசொப்ட் நிறுவனத்தில் 9000 பேர் பணி நீக்கம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.