மியான்மரின் அடுத்த 10 மாதங்களுக்குள் பொதுத் தேர்தல்களை நடத்துவதற்கான திட்டங்களை இராணுவ அரசாங்கம் அறிவித்துள்ளது. ஜனவரி 2026 க்குள் வாக்களிப்பு நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பெலாரஸுக்கு மேற்கொண்ட அதிகாரப்பூர்வ பயணத்தின்போது மூத்த ஜெனரல் மின் ஆங் ஹ்லைங் தெரிவித்தார். பெப்ரவரி 2021 இல் ஆங் சான் சூகியின் ஜனநாயக ரீதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தை இராணுவம் வெளியேற்றியது.
53 அரசியல் கட்சிகள் ஏற்கனவே தங்கள் பங்கேற்பு பட்டியலை சமர்ப்பித்துள்ளன. ஆனால், சரியான தேர்தல் திகதி இன்னும் முடிவு செய்யப்படவில்லை என்று ராணுவத் தலைவர் கூறினார்.
சுதந்திரமாகவோ அல்லது நியாயமாகவோ இருக்க வாய்ப்பில்லாத ஒரு தேர்தல் செயல்முறை மூலம் அதன் ஆட்சியை சட்டப்பூர்வமாக்க இராணுவத்தின் முயற்சியாக இந்த நடவடிக்கையை நிபுணர்கள் கருதுகின்றனர்.
எதிர்க்கட்சித் தலைவர்கள் சிறையில் இருப்பதால், ஜெனரல்களின் அதிகாரத்தை பலப்படுத்துவதற்காக தேர்தல் வடிவமைக்கப்பட்டுள்ளது என்று விமர்சகர்கள் வாதிடுகின்றனர்.
Trending
- பாகிஸ்தான் ஆப்கானிஸ்தான் மோதல், இந்தியா மீது குற்றச்சாட்டு ட்ரம்ப் கண்டனம்
- மாகாண சபைத் தேர்தல் நடைபெறுமா? 13 ஆவது திருத்தச் சட்டத்தின் எதிர்காலம்!
- தீபாவளியை முன்னிட்டு விசேட போக்குவரத்துச் சேவைகள் ஆரம்பம்
- 2025 ஆசிய ரக்பியில் உஸ்பெகிஸ்தானை வீழ்த்திய இலங்கை
- ரசிய – இந்திய எண்ணெய் வர்த்தகம், ட்ரம்பின் அறிவிப்பில் குளறுபடியா?
- சுக்கிரன் சொந்த ராசிக்கு செல்வதால் தீபாவளிக்கு பின் இந்த 3 ராசிகளுக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப் போகுதாம்
- 2026 முதல் நடைமுறையாகும் புதிய கல்விச் சீர்திருத்தம்
- இலங்கை உணவுக்கு உலக அளவில் பாராட்டு