இலங்கையில் பற்றாக்குறையாக உள்ள சுமார் 30 மருந்துகளை இறக்குமதி செய்வதற்கு இலங்கை,இந்திய அரசாங்கங்களுக்கு இடையே ஒரு ஒப்பந்தம் கையெழுத்தாகும் என்று சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
விநியோகஸ்தர்களின் பிரச்சினைகள் காரணமாக சுமார் 30 மருந்துகளுக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக சுகாதார துணை அமைச்சர் டாக்டர் ஹன்சகா விஜேமுனி தெரிவித்தார்
இது தொடர்பாக அவர் மேலும்தெரிவிக்கையில்,
சில விநியோகஸ்தர்கள் சரியான நேரத்தில் ஒப்பந்தம் செய்யப்பட்ட மருந்துகளை வழங்குவதில்லை. சில மருந்துகளுக்கான ஏலங்கள் ச்டமர்ப்பிக்கப்படவில்லை. இதனால் மருந்துகளின் பற்றாக்குறை உள்ளது. பெரும்பாலானவற்றுக்கு மாற்றீடுகள் கிடைக்கின்றன, ஆனால் சிலவற்றிற்கு மாற்று வழிகள் இல்லை,” என்று அவர் கூறினார்.
தேவையான மருந்துகளை வாங்குவதற்கு இந்திய அரசாங்கத்திற்கு இடையேயான ஒப்பந்தம் தொடர்பாக இலங்கையில் உள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயத்துடன் கலந்துரையாடல்கள் நடத்தப்பட்டதாக அவர் மேலும் கூறினார்.
தேவையான மருந்துகளை வாங்குவதற்கு அரசாங்கத்திற்கு இடையேயான ஒப்பந்தம் குறித்து இலங்கையில் உள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயத்துடன் (HC) கலந்துரையாடல்கள் நடத்தப்பட்டதாக அவர் மேலும் கூறினார். மருந்துகளை இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்வதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவோம்,” என்று அவர் விளக்கினார்.
Trending
- இலங்கைக்கான அமெரிக்க தூதுவராக எரிக் மேயர்!
- “ஜென்ம நட்சத்திரம்” திரைப்பட ட்ரெய்லர் வெளியீடு!
- ரி20 உலகக் கிண்ணப் போட்டிக்கு இத்தாலி தகுதி பெற்றது.
- இளையராஜாவிற்கு பதிலடி கொடுத்த வனிதா!
- எக்ஸ்-பிரஸ் பேர்ல் சுற்றுச்சூழல் பேரழிவை ஜனாதிபதி விசாரிக்க வேண்டும்
- காமன்வெல்த் சம்பியன்ஷிப்பில் இலங்கைக்கு தங்கம்
- பழங்குடியின மக்களுக்கு 78 ஆண்டுகளின் பின் மின்சாரம்!
- கபில்தேவ் சாதனையை முறியடித்த பும்ரா!