மருதானை, பஞ்சிகாவத்தையில் நேற்று இரவு நடந்த துப்பாக்கிச் சூட்டு முயற்சியில் துப்பாக்கி செயலிழந்ததால் துப்பாக்கிச் சூடு தோல்வியடைந்தது.
மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத இரண்டு நபர்கள், முச்சக்கர வண்டியை பழுதுபார்க்கும் பணியில் ஈடுபட்டிருந்த உள்ளூர்வாசியை குறிவைத்து தாக்குதல் நடத்தியதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
பாதிக்கப்பட்டவர் சம்பவ இடத்திலிருந்து காயமின்றி தப்பி ஓடிவிட்டார்.
சந்தேக நபர்கள் தப்பிச் செல்லும் போது ஒரு தோட்டாவை வீசியதாக பொலிசார் தெரிவித்தனர்.
மேலும் விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.