இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழு அதிகாரிகளால் இன்று பகல் முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்கார கைது செய்யப்பட்டுள்ளார்.
இஸ்ரேலுக்கு இலங்கையர்களை வேலைக்கு அனுப்பிய விவகாரத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் முறை கேடு தொடர்பில் இடம்பெற்று வரும் விசாரணைகளின் பிரகாரமே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் வாக்குமூலம் அளிப்பதற்காக மனுஷ நாணயக்கார இன்று முன்னிலையாகி இருந்த நிலையிலேயே கைது இடம்பெற்றுள்ளது.
கைது செய்யப்பட்ட மனுஷ நாணயக்காரவை நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது.ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாக இருந்த போது இவர் அமைச்சராக இருந்தமை குறிப்பிடத்தக்கது.