மது , சிகரெட் பாவனைக்காக நாளொன்றுக்கு 1,210 மில்லியன் ரூபாவை இலங்கையர் செலவளிப்பதாக மது மற்றும் போதைப்பொருள் தகவல் மையம் (ADIC) 2022 இல் நடத்தப்பட்ட கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது.
மதுபானம் மற்றும் போதைப்பொருள் பாவனையால் சுகாதாரம் மற்றும் பொருளாதாரத் துறைகளில் 237 பில்லியன் ரூபா வருமானம் பதிவாகியுள்ளது. அதேவேளையில் 2022 இல் வரி வருமானம் 165.2 பில்லியன் ரூபாஎன பதிவாகியுள்ளது.
ஆண்டுதோறும் மது அருந்துவதால் 15,000 பேரும், சிகரெட் பாவனையால் 20,000 பேரும் மரணமாகிறார்கள்.
இலங்கையில் தொற்றாத நோய்கள் பரவுவதில் 80% அதிகரிப்பு காணப்படுவதாகவும், இதற்கு மதுபானம் மற்றும் சிகரெட் பாவனையே முக்கிய காரணங்களாகும் என ADIC சுட்டிக்காட்டியுள்ளது.
2023 இல் 20% வரி அதிகரிப்பைத் தொடர்ந்து, மதுவின் நுகர்வு 8.3 மில்லியன் லீற்றர் மதுபானம் குறைந்துள்ளது, அதேவேளை வரி வருவாய் ரூ.11.6 பில்லியன் ரூபாவாக அதிகரித்துள்ளது.
சிகரெட் விற்பனை மூலம் வரி வருவாய் 7.7 பில்லியன், சிகரெட் விற்பனை 521.5 மில்லியன் யூனிட்கள் குறைந்துள்ளது என ADIC தெரிவித்துள்ளது.
Trending
- அதிவேக வீதிகளில் டெபிட்,கிரெடிட் கார்டு மூலம் பணம் செலுத்தலாம்
- ரணிலுக்கு லஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு அழைப்பாணை
- அதிமுகவுடன் கூட்டணி அறிவித்தார் அமித்ஷா
- உயிருடன் இருப்போரை இறந்ததாக அறிவித்த ட்ரம்ப் நிர்வாகம்
- அவுஸ்திரேலியாவில் இந்திய துணை தூதரகத்தை தாக்கிய மர்ம நபர்கள்
- கயல் நடிகர் பிரபாகரன் மரணம்
- பொன்முடியின் பதவியைப் பறித்த ஸ்டாலின்
- தமிழகத்தில் அமித்ஷா கூட்டணித் தலைவர்கள் சந்திப்பு