டீசலுடன், மண்ணெண்ணெய் கலந்து பாரவூர்தி செலுத்திய சாரதி, சந்தேகத்தின் பேரில் நேற்று (16) கைது செய்யப்பட்டுள்ளார்.
நுவரெலியா நீதவான் நீதிமன்றத்தில் சந்தேக நபருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என லிந்துலை பொலிஸ் போக்குவரத்து பிரிவின் பொறுப்பதிகாரி பாலித நந்தசிறி தெரிவித்தார்.
வலப்பனையிலிருந்து ஹட்டனுக்கு மணல் கொண்டு செல்லும் சில பாரவூர்திகள் டீசலுடன் மண்ணெண்ணெய் கலந்து செல்வதாக பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைய லிந்துலை பொலிஸார் அதிரடியாக மேற்கொண்ட சுற்றிவளைப்பில் பாரவூர்தி கண்டுபிடிக்கப்பட்டதாக பாலித நந்தசிறி தெரிவித்தார்.
பாரவூர்தியிலிருந்து எடுக்கப்பட்ட எரிபொருள் மாதிரிகள் பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் ஆய்வகத்திற்கு அனுப்பபட்டு அங்கிருந்து அறிக்கை பெறப்படும், மேலும் அந்த அறிக்கையுடன் சந்தேக நபருக்கு எதிராக நீதிமன்றத்தில் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று லிந்துலை பொலிஸ் போக்குவரத்துப் பிரிவின் பொறுப்பதிகாரி மேலும் தெரிவித்தார். சாரதி பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார்.
Trending
- காசா மீது இஸ்ரேல் விமானத் தாக்குதல், மீண்டும் போர் ஆரம்பம்!
- பாகிஸ்தான் ஆப்கானிஸ்தான் மோதல், இந்தியா மீது குற்றச்சாட்டு. ட்ரம்ப் கண்டனம்
- மாகாண சபைத் தேர்தல் நடைபெறுமா? 13 ஆவது திருத்தச் சட்டத்தின் எதிர்காலம்!
- தீபாவளியை முன்னிட்டு விசேட போக்குவரத்துச் சேவைகள் ஆரம்பம்
- 2025 ஆசிய ரக்பியில் உஸ்பெகிஸ்தானை வீழ்த்திய இலங்கை
- ரசிய – இந்திய எண்ணெய் வர்த்தகம், ட்ரம்பின் அறிவிப்பில் குளறுபடியா?
- சுக்கிரன் சொந்த ராசிக்கு செல்வதால் தீபாவளிக்கு பின் இந்த 3 ராசிகளுக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப் போகுதாம்
- 2026 முதல் நடைமுறையாகும் புதிய கல்விச் சீர்திருத்தம்